ஊரை விட்டு சற்று தள்ளி இருந்தது அந்த பாழடைந்த மண்டபம் ,சுற்றிலும் வெட்ட வெளி ,எங்கும் பயம் கலந்த அமைதி ,மண்டபத்துக்குள் வவ்வால் கூட்டம் இரைச்சலோடு பறக்கும் சத்தம் ,குப்பை கூளங்கள் நிறைந்த அந்த இடத்தில் ஒரே துர்நாற்றம் ,நாய்களின் ஊளைசத்தம் வேறு .மொத்தத்தில் ஒருவித பயத்தை ஏற்படுத்தியது அந்த இடம்.
''அவனை இழுத்து வந்து இந்த தூணில் கட்டி போடுங்கள் !!''
நான்கைந்து பேர் இருந்த கூட்டத்தில் தலைவன் போல் ஒருவன் அப்படி கத்தினான் .
'என்ன,,ஏதாவது சொன்னானா ?''
''இல்லை எது கேட்டாலும் பதில் சொல்லாமல் ஊமையாய் இருக்கிறான் ''
''அந்த சவுக்கை கொடு !!''
சவுக்கை கையில் வாங்கிய தலைவன் ,தூணில் கட்டபட்டிருந்த பெரியவரை அடித்தான் .
''ம்ம் ''உண்மையை சொல் .இரும்பை பொன்னாக்கும் ரகசியத்தை எங்களுக்கு சொல் !!
ஆனால் அந்த ரகசியம் தெரிந்த -கட்டப்பட்டு கிடந்த பெரியவரிடம் இருந்து ஒரு பதிலும் வரவில்லை .
''இவனுக்கு குடிக்க தண்ணீர் கூட கொடுக்காதீர்கள் ''
கை வலிக்க அடித்தவன் களைப்பினாலும் ,விரக்தியாலும் கத்தினான் ''
டேய் !!இங்க வா .ஊருக்குள் சென்று சாப்பிட ஏதாவது வாங்கி வா'' !!
கூட்டத்தில் இருந்த ஒருவன் இந்த கட்டளையை ஏற்று ஊருக்குள் சென்றான் ,அங்கு உணவகத்தில் உணவு பண்டங்கள் வாங்கி கொண்டு வெளியில் வந்தான் .
பக்கத்தில் ஒரு பெட்டி கடை இருந்தது ''அங்கே சென்று ''ஏம்ப்பா ஒரு கட்டு பீடி கொடு !!
கடைக்காரர் கொடுத்த பீடியில் ஒன்றை எடுத்து பற்ற வைத்தான் ,அப்பொழுது ஒருவர் அவன் தோளை தட்டி ஏம்ப்பா !!கொஞ்சம் நெருப்பு கொடு !!சுருட்டு பற்ற வைக்க வேண்டும் !!திரும்பியவன் அவர் முகத்தை பார்த்ததும் தூக்கி வாரி போட்டது அவனுக்கு ,மண்டபத்தில் கட்டி வைக்கப்பட்டு இருந்தவர் அங்கு நின்று கொண்டிருந்தார் 'தம்பி நெருப்பு கொடுப்பா !!என மீண்டும் சிரித்து கொண்டே கேட்டார் .
ஏதோ பேயை பார்த்து மிரண்டவன் போல மண்டபத்தை நோக்கி அவன் ஓடினான் ,அங்கு தூணில் கட்டப்பட்டு இருந்தவரை நோக்கி அனைவரும் கேள்வி கேட்டு கொண்டிருந்தனர் ,இவனால் அந்த காட்சியை நம்ப முடியவில்லை ,எப்படி ?ஒரே ஆள் இரண்டு இடங்களில்''!!!சித்தம் கலங்கியது போல் குழப்பத்தில் இருந்தான் ,கட்டபட்டு இருந்த பெரியவர் இவனை பார்த்து சிரித்தார் 'அங்கு வெளியில் பார்த்த அதே பெரியவரின் சிரிப்பை போல் இருந்தது அது ..
அங்கு இருந்தவர்களிடம் தான் பார்த்த காட்சியினை கூறினான் அவன் .அனைவரும் ஒரு வித பயத்தோடு பெரியவரை பார்த்தார்கள் .
டேய் !!இவர் சித்து வேலை தெரிந்தவர் போல் இருக்கிறது 'பேசாமல் கட்டை அவிழ்த்து விடுங்கள் என்று கூறினான் தலைவன் .பெரியவர் அவர்களிடம் பிறப்பு ,இறப்பு பற்றியும் ,இவ்வுலகில் ஏதும் நிரந்தரம் இல்லை எனவும் தெளிவாக விளக்கம் அளிக்க!! விட்டால் போதும் என அவர்கள் ஓடிவிட்டார்கள் .
யார் இந்த பெரியவர் ''?
அவர் தான் கம்பளி ஞான சித்தர் ''புதுச்சேரி சித்தர்களுள் ஒருவர் .
எப்பொழுதும் கம்பளியால் தன் உடலை போர்த்தி இருப்பார் .ரசவாத கலையில் இருந்து அனைத்து சித்துகளையும் பெற்று இருந்தாலும் எப்போதும் சுருட்டு பிடித்தபடி இருப்பார் .
இந்த சித்தர் முதலில் ,மனைவி ,குழைந்தைகள் ,அரசாங்க வேலைகள் என வாழ்ந்து கொண்டிருந்தார் ,வாழ்கையில் எல்லா வசதி வாய்ப்புகள் இருந்தும் ,ஏனோ மன அமைதி மட்டும் இல்லை ,சென்னை யில் இருந்த காரணத்தினால் மன அமைதி வேண்டி பல கோவில்களுக்கும் ,ஆன்மீக கூட்டங்களுக்கும்,சென்று வந்தார் .அப்போது ஒரு முஸ்லிம் பெரியவரின் தொடர்பு கிடைத்தது ,தான் இந்துவாக இருந்தாலும் அந்த பெரியவர் சொல்லி கொடுத்த அனைத்து ரகசியங்களையும் கற்று கொண்டார் .
ஒரு நாள் இரவு அயர்ந்து தூங்கி கொண்டிருந்தார் ,தூக்கத்தில் கனவு ,கனவில் முஸ்லிம் பெரியவர் 'உடனே புதுச்சேரிக்கு செல் ''என்று கட்டளையிட்டார் அவர் .அதன் பின் மறைந்து விட்டார் .
காலையில் எழுந்ததும் முஸ்லிம் பெரியவரை காண சென்றார். ,அனால் அவரை காணவில்லை .அவ்வளவுதான் ,யாரிடமும் சொல்லி கொள்ளாமல் புதுச்சேரிக்கு கிளம்பி விட்டார் .
ஒரு நாள் இந்த சித்தர் கால் போன போக்கில் ஏனோ தானோ வென்று எதையோ முணுமுணுத்தபடி சென்று கொண்டிருந்தார் ,நடந்த களைப்பால் தண்ணீர் தாகம் ஏற்பட்டது ,சுற்றும் முற்றும் பார்த்தார் ,ஒரு கள்ளு கடை மட்டும் இருந்தது .அங்கு சென்றார் .
''குடிக்க கள் கொடு ''என்று கேட்டார் .
''முதலில் காசை கொடு -இது கடைக்காரன்
அவ்வளவு தான் !!சித்தருக்கு வந்ததே கோபம் .''உன் கடையில் இன்று முழுவதும் ''கள்'' இருக்கும்''என்று சொல்லிவிட்டு சென்று விட்டார் 'அதாவது அன்று முழுவதும் வியாபாரம் நடக்காது என்றார் .
அவர் சொன்னபடியே மதியம் வரை வியாபாரமே நடக்கவில்லை .கடைக்காரன் பயந்து விட்டான் 'ஒரு ஞானியை பிச்சைக்காரன் என்று
துரத்திவிட்டோமே!!என்று வருந்தினான் .சித்தரை தேடி போய் அவரிடம் மன்னிப்பு கேட்டான் ,அவரும் மன்னித்தார் கடையும் களை கட்டியது .
மற்றொரு நாள் சித்தர் தெருவில் சென்று கொண்டிருந்தார் ,செல்லும் வழியில் ஒரு வீட்டில் உணவு சமைக்கும் வாசனை வந்தது ,உடனே அந்த வீட்டு திண்ணையில் போய் அமர்ந்து விட்டார் .சிறிது நேரத்திற்கு பிறகு கதவை தட்டினார் ''தாயே ''...பசிக்கிறது ,அன்னமிடுங்கள் !!என்றார் .''அன்னமா ....இன்று நான் சமைக்கவே இல்லையே .....''என்றாள் அந்த வீட்டு பெண்மணி .
''சற்று நேரத்திற்கு முன்பு தான் சாதம் வேகும் நல்வாசனை வந்தது தாயே ...''
''கண்ட பிச்சைக்காரனுக்கு போடுவதற்கு ஒன்றும் நான் சாதம் வடிக்கவில்லை ''என்று கோபத்தில் எரிந்து விழுந்தாள் அந்த பெண் .
சித்தர் போர்த்தி இருந்த சித்தரின் தோற்றம் அவரை அப்படி காண்பித்தது ''
''சரி ..''உங்கள் வீட்டு சாப்பாட்டை நீங்களே போய் சாப்பிடுங்கள் ''என்று சொல்லிவிட்டு அங்கிருந்து சென்று விட்டார் அவர் .
வீட்டிற்குள் சென்ற பெண்மணி தான் வடித்து வைத்த சாதத்தினை சாப்பிட அமர்ந்தார் ,சாதம் தயார் செய்த பாத்திரத்தினுள் கரண்டியால் கிளறிய போது ''அதிர்ச்சியாகி ஓ ''வென அலறினாள்.காரணம் சாதம் முழுவதும் புழுவாக மாறி இருந்தது .
வீட்டிற்கு வந்த அவளது கணவன் விஷயத்தை அறிந்து சித்தரை தேடி சென்றார்கள் .ஒரு மரத்தடியில் கண்கள் மூடிய நிலையில் அமர்ந்து இருந்தார் அவர் .அவர்களின் சத்தம் கேட்டு கண்களை திறந்து பார்த்தார் .எங்களை மன்னித்து விடுங்கள் சாமி !!என்று அவரிடம் கெஞ்சினார்கள் ''
அவர்களை மன்னித்த சித்தர் ''பசியோடு கேட்பவர்களுக்கு இருப்பதை கொடுங்கள் ''இல்லை என்று விரட்டாதிர்கள் ,இலை போட முடியாவிட்டாலும் ஒரு பிடி சாதமாவது கொடுங்கள் 'அதுதான் நல்லது என்று அறிவுரை வழங்கினார் .
வீட்டிற்கு அழைத்தனர் அவரை ,பசி தீர்ந்து விட்டது 'என நீங்களே அந்த உணவை சாப்பிடுங்கள் 'நீங்களே இப்போது ஆச்சரியபடுவீர்கள் என்றார்.
அவர் சொனனது போலவே புழுக்களாக மாறி இருந்த சாதம் மீண்டும் பழைய நிலைக்கு வந்தது .
இப்படி பலேறு அதிசயங்களை நிகழ்த்திய கம்பளி சித்தரின் மறைவும் மக்களை ஆச்சரியபடவைத்தது.
அன்று காட்டுபகுதி வழியாக நடந்து போய் கொண்டிருந்தார் ,அவரை பாம்பு ஒன்று தீண்டி விட்டது.இதை அறிந்து அந்த பகுதி வழியாக வந்தவர்கள் வைத்தியரை நோக்கி ஓடினார்கள் .தகவல் அறிந்த ஊர் மக்களும் திரண்டு வந்தனர் .ஆனால் சித்தரை மட்டும் காணவில்லை .
கம்பளி சித்தரை தேடி சென்ற போது ஓரிடத்தில் அவரை கடித்த பாம்பு இறந்து கிடந்தது ,சித்தருக்கும் ஏதோ நேர்ந்து விட்டது என்றே அவர்கள் கருதினார்கள் .தீடீர் என்று கூட்டத்தில் இருந்து ஒரு குரல் பரபரப்புடன் ஒலித்தது ''அதோ பாருங்கள் .......ஓடையில் ஒரு உருவம் தெரிகிறது ''.
மொத்த கூட்டமும் ஓடையை நோக்கி சென்றது 'அங்கு அவர்கள் கண்ட காட்சி அதிசயமாக தெரிந்தது 'அந்த சித்தர் சில்லென்று ஓடிகொண்டிருந்த நீரின் மேல் பத்மாசன நிலையில் தியானத்தில் அமர்ந்து இருந்தார் .
காண்பது கனவா ?இல்லை நினைவா என்று அனைவரும் பரபரப்பானர்கள் ,ஓடையில் வெள்ளம் பெருக்கெடுத்து வந்தது .சித்தர் மெல்ல மெல்ல தண்ணீருக்குள் மூழ்க தொடங்கினார் ,இறுதியாக முழுவதுமாக மூழ்கிவிட்டார் .
மக்கள் கூட்டம் பதறியது கம்பளி சித்தர் இறந்து போய் விட்டார் என்றே அவர்கள் கருதினார்கள் .மறுநாள் காலை ,அவர்கள் நினைத்தது போலவே சித்தரின் பூத உடல் தியான நிலையில் ஒதுங்கி இருந்தது .ஊர் மக்கள் அந்த சடலத்தை மீட்டு ஓடையின் அருகிலேயே சமாதி எழுப்பினார்கள் .
இன்று அந்த நினைவிடம் கம்பளி சித்தர் கோவிலாக உருவெடுத்துள்ளது .கம்பளி சித்தர் இன்னமும் மக்கள் குறை தீர்த்து அருளை வாரி வழங்கி கொண்டிருக்கிறார் .
சென்னையில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக புதுச்சேரி செல்பவர்கள் தட்டாஞ்சாவடி என்று கேட்டு இறங்கி கொள்ளவேண்டும் .அங்கிருந்து தொழிற்பேட்டை வழியாக கம்பளி சித்தர் கோவிலுக்கு செல்லலாம் ,
சித்ரா இங்கர்சால் -சென்னை
(பா .சண்முகம்) .