Tuesday, 24 May 2011

பரிசுத்த உணவு

சுவாமி விவேகானந்தர் துறவறம் மேற்கொண்ட போது ,அவருடன் மேலும் பத்து பேர் சன்னியாசியாக வாழ்கையை தேர்வு செய்தனர் ,சன்னியாசம் மேற்கொண்ட விவேகானந்தர் உள்ளிட்டவர்கள் முதன் முதலாக யாசகம் கேட்டது அன்னை சாரதா தேவியிடம் தான் .அவர் அவர்களுக்கு ஒரு ரூபாய் யாசகம் செய்தார் .
அதன் பின்னர்,விவேகானந்தர் உள்ளிட்டோர் வெளியில் யாசகம் கேட்க சென்றனர் ,அப்போது பலவிதமான அனுபவங்கள் அவர்களுக்கு கிடைத்தன ,சில இடங்களில் அரிசி ,பருப்பு ,காய்கறிகள்  கிடைத்தன ,இன்னும் சில இடங்களில் ''உடம்பு நல்லாதானே இருக்கு''பிச்சை எடுத்து சாப்பிட வெட்கம் இல்லையா ?என்று வசை பாடினார்கள் ,
ஒரு வழியாக கிடைத்த பொருட்களை கொண்டு போய் ராமகிருஷ்ணரிடம் கொடுத்தனர் ,அவர் அன்னை சாரதா தேவியிடம் கொடுத்து சமைக்குமாறு கூறினார் .
சிறிது நேரத்தில் உணவு தயாரானது .சமைத்த உணவில் சிறிது எடுத்து வாயில்  போட்டுக்கொண்ட ராமகிருஷ்ணர்''இந்த உணவு மிகவும் தூய்மை யானது ''என்றார் அவரை தொடர்ந்து நரேந்திரர் உள்ளிட்ட பிற சீடர்கள் அந்த உணவை உட்கொண்டனர் .

No comments: