Tuesday, 24 May 2011

மனிதாபிமானம்

கேவலமான உணர்வுக்கும் ,உயர்ந்த உணர்வுக்கும் நடுவே சராசரி மனிதன் நிற்கிறான் .மிருகத்தை பார்க்கும் போது மனிதாபிமானத்தின் மீது பற்று வருகிறது ,மனிதனை பார்க்கும் போது தெய்வம் தேவை படுகிறது ,எல்லோருமே தெய்வங்களாகி விட்டால் தெய்வ தத்துவம் செத்துப்போகும் .எல்லாருமே மிருகங்கள் ஆகிவிட்டால் தெய்வமே பயனற்று போகும் .நடுவே நிற்கும் மனிதன் உலக இயக்கத்தின் பிதாவாகிறான் ,அவனை பார்த்தே தெய்வங்களும் ,மிருகங்களும் உணரப்படுகின்றன .அதனால் தான் மிருகத்திற்கும் ,தெய்வத்திற்கும் நடுவே உள்ள மனிதனிடம் ஒரு அபிமானத்தை வளர்க்க இந்து மதம் முயற்சி எடுத்தது .இதன் பெயரே மனிதாபிமானம் .
-கவியரசு கண்ணதாசன் .

No comments: