Tuesday, 24 May 2011

வாரியாரின் 'பய பக்தி'

திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகளிடம் ஒரு வழக்கம் இருந்தது ,வெளியூருக்கு
சொற்பொழிவுக்காக காரில் செல்லும் போது, வழியில் தென்படும் சின்ன சின்ன கோவில்களின் முன்பு கூட காரை நிறுத்தி பயபக்தியுடன் சாமி கும்பிடுவார் .
ஒரு சமயம் இது பற்றி அவரிடம் கேட்டபோது ''ஒவ்வொரு கோவிலாக காரை நிறுத்தி சாமி கும்பிடுவது பக்தி .கார் டிரைவர் தூங்கிட்டாரா அல்லது விழித்திருந்து கார் ஓட்டுகிறாரா என்று பார்த்து அவருக்கு விபூதி பூசுவது பயம் .இப்போது புரிகிறதா பயபக்தி ?என்றாராம்.

பா .சண்முகம்

No comments: