கருட புராணம்
ஒரு உயிர் போன பின் செய்ய வேண்டிய கருமங்களை பற்றி கருட புராணம் இப்படி கூறுகிறது .இறந்த உயிர் பிரேத ஜென்மம் எடுக்கும் ,இறப்பதற்கு முன்பே ஒவொருவருக்கும் பிரேத ஜென்மம் எடுத்தாலும் முக்தியை நோக்கி சென்றிட தோதாக 'விருஷேஷ சர்க்கம் 'என்னும் தான தர்மங்களை செய்ய வேண்டும் ,எப்படி கட்டு சாதமுடன் பயணம் செய்பவன் பசியறியாது பயணிப்பானோஅப்படித்தான் தர்மம் செய்தவன் உயிர் தான தர்மத்தால் விளைந்த புண்ணியத்துடன்இறந்த பிறகு பசி ,தாகமற்று செல்ல வேண்டிய இடம் செல்வான் தானா தர்மங்களில் தலையானது உத்தம பிராமணனுக்கு சோறிடுவது ,அவனை ஏமாற்றாமல் இருப்பது அடுத்து பசுவை போஷிப்பது ,அதை தானமாக பிறருக்கு கொடுப்பது இவைகளை செய்த ஒருவன் உயிர் உடம்பை விட்டு பிரிந்த பின் நற்கதியை நோக்கியே செல்லும் ,அதே சமயம் இறந்தவன் சார்பாக அவனது உற்றார்,உறவினர்களும் இந்த தர்ம காரியங்களில் ஈடு பட வேண்டும் .
கருட புராணம்
No comments:
Post a Comment